பதிவு செய்த நாள்
14 ஜன2013
09:11
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 26.40 புள்ளிகள் அதிகரித்து 19637.24 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.40 புள்ளிகள் குறைந்து 5937.40 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இன்போசிஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு செயல்பாடு, சந்தை மதிப்பீட்டை விட, நன்கு இருந்ததை அடுத்து, முற்பகல் வரை பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இந்நிலையில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, சென்ற நவம்பர் மாதத்தில் பின்னடைவை கண்டுள்ளது என்ற செய்தியால், பங்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இச்சூழ்நிலையில், சீனாவின் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.இருப்பினும், ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இருந்தாலும், ஒட்டுமொத்த அளவில், உலகளவில் பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கம் இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|