பதிவு செய்த நாள்
21 ஜன2013
04:12
கடந்த ஏழு மாதங்களாக, உள்நாட்டில் ரப்பர் விலை, 15-20 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. இருப்பினும், டயர் தயாரிப்பு நிறுவனங்கள், டயர் விலையை குறைக்காமல் உள்ளன.இயற்கை ரப்பர் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதையடுத்து, கடந்த ஓராண்டில், நிறுவனங்கள், டயர் விலையை 20-25 சதவீத அளவிற்கு உயர்த்தின.
இந்நிறுவனங்களின், மொத்த உற்பத்தி செலவில், இயற்கை ரப்பரின் பங்களிப்பு, 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது.தற்போதைய நிலையில், சர்வதேச விலையை காட்டிலும், உள்நாட்டில் ரப்பர் விலை, கிலோவுக்கு 25 ரூபாய் குறைவாக உள்ளது. எனினும், இதன் பலன் நுகர்வோரை சென்றடையாத வகையில், நிறுவனங்கள் டயர் விலையை குறைக்கவில்லை.
இதுகுறித்து அப்பலோ டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் (இந்திய செயல்பாடு) சதீஷ் சர்மா கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளில், மூலப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இது தவிர, கடந்த ஓராண்டாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், செயற்கை ரப்பர் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிச் செலவினம் உயர்ந்துள்ளது. எனவே, டயர் விலையை குறைக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|