பதிவு செய்த நாள்
25 ஜன2013
09:09

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.79 புள்ளிகள் அதிகரித்து 19935.57 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 10.65 புள்ளிகள் அதிகரித்து 6030.00 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று, மிகவும் மோசமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம்உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|