பதிவு செய்த நாள்
27 ஜன2013
00:08
மும்பை:நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 58 கோடி டாலர் (3,190 கோடி ரூபாய்) குறைந்து, 29,567 கோடி டாலராக (16.24 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய, 11ம் தேதியுடன் நிறைவுஅடைந்த வாரத்தில், 29,625 கோடி டாலர் (16.29 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 26,163 கோடி டாலராக குறைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 2,722 கோடி டாலர் என்ற அளவிலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 443 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 239 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|