நீர்போக உருளைக்கிழங்கு சாகுபடியில் அதிக லாபம் நீர்போக உருளைக்கிழங்கு சாகுபடியில் அதிக லாபம் ... வெங்காயம் விலை விர்ர்... கட்டுப்படுத்த அரசு முயற்சி வெங்காயம் விலை விர்ர்... கட்டுப்படுத்த அரசு முயற்சி ...
உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி 3.9 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:38

கோல்கட்டா:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின் உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி, 3.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி, 5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
உருக்கு இறக்குமதிஉள்நாட்டில் உருக்கு பொருட் களுக்கான தேவை சரிவடைந்து வருவது மற்றும் அதிகளவு இறக்குமதியால், உருக்கு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து, அதிகளவில் உருக்கு இறக்குமதி மேற்கொள்ளப்படுவதால், உள்நாட்டு உருக்குத் துறை நிறுவனங்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.கட்டுமானப் பணி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரும்புத் தாதுவுக்கான பற்றாக்குறை போன்றவை உள்நாட்டில் செயல்பட்டு வரும் உருக்குத் துறை நிறுவனங்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளன என, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.எம்.நெருர்கர் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காமன்வெல்த் நாடுகள் மற்றும் சீனாவிலிருந்து, வர்த்தக பயன்பாட்டிற்கான உருக்கு தகடுகள் இறக்குமதி, 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போன்று, தென் கொரியா மற்றும் ஜப்பானிலிருந்து, மோட்டார் வாகனத் துறைக்கான உருக்கு தகடுகள் இறக்குமதி, 70 சதவீதம் அதிகரித்துள்ளது.உருக்கு இறக்குமதி அதிகரித்துள்ளதற்கு, குறைவான வரி விதிப்பே முக்கிய காரணம் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதிப்பீடு:இருப்பினும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 15 சதவீதமாகக் குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதற்கேற்ப, சென்ற டிசம்பர் மாதத்தில், உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி, 1.4 சதவீதம் அளவிற்கே உயர்ந்துள்ளது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், கட்டுமான திட்டப் பணிகள் சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, உள்நாட்டில், உருக்கு பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால், நடப்பு பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டு உருக்குத் துறை நிறுவனங்கள், ஒரு சில உருக்கு பொருட்களின் விலையை, டன்னுக்கு, 500 ரூபாய் உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், சர்வதேச சந்தையில், கடந்த இரண்டு மாதங்களாக உருக்கு உற்பத்திக்கு மூலப்பொருளாக உள்ள, இரும்புத் தாதுவின் விலை, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.குறிப்பாக, சென்ற ஜனவரியில், ஒரு டன் இரும்புத் தாது விலை, 140 - 145 டாலர் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த செப்டம்பர் மாத விலையுடன் ஒப்பிடுகையில், 61 சதவீதம் அதிகமாகும்.இரும்பு தாது:என்.எம்.டீ.சி., நிறுவனம், சர்வதேச விலை நிலவரத்திற்குஏற்ப ஒவ்வொரு மாதமும், இரும்புத் தாது விலையை நிர்ணயம் செய்து வருகிறது. சென்ற ஜனவரி மாதத்தில், இந்நிறுவனம், இரும்புத் தாது விலையை, டன்னுக்கு, 320 ரூபாய் (6 சதவீதம்) குறைத்தது.இந்நிலையில், நடப்பு மாதத்தில், இரும்புத் தாது விலையை, டன்னுக்கு, 200 முதல், 400 ரூபாய் வரை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)