பதிவு செய்த நாள்
07 பிப்2013
23:50
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்றும் மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக குறையும் என்ற மத்திய அரசின் மதிப்பீடு வெளியானது. இதையடுத்து,
இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சுணக்கம் கண்டது.
மேலும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. அதே சமயம், ஐரோப்பிய நாடுகளில் பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்ததையடுத்து, அந்நாடுகளின் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கை மாறின. இருப்பினும், நுகர்பொருட்கள், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 59.40 புள்ளிகள் சரிவடைந்து, 19,580.32 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,702.56 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,540.08 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 20.40 புள்ளிகள் குறைந்து, 5,938.80 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,978.50 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,927.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|