இந்திய ரயில்வே வருவாய்ரூ.1 லட்சம் கோடியை தாண்டியதுஇந்திய ரயில்வே வருவாய்ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது ... பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால்... உணவு தானிய உற்பத்தி 25 கோடி டன்னாக குறையும் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால்... உணவு தானிய உற்பத்தி 25 கோடி டன்னாக ... ...
அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.55 கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2013
00:38

புதுடில்லி:சென்ற டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், அலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2.60 கோடி குறைந்து, 89.55 கோடியாக சரிவடைந்துள்ளது என, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டு:கடந்த ஒரு சில மாதங்களாக, உள்நாட்டில் செயல்படும், ஒரு சில அலைபேசி சேவை நிறுவனங்கள், பயன்படுத்தாமல் உள்ள,"சிம் கார்டு'களை முடக்கியதை அடுத்து, ஒட்டுமொத்த அளவில், அலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற நவம்பர் மாதம், உள்நாட்டில், அலைபேசி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 89.06 கோடியாக குறைந்தது. இது, டிசம்பர் மாதத்தில், மேலும் சரிவடைந்து, 86.47 கோடியாக குறைந்து போனது.
கடந்த டிசம்பர் மாதத்தில், யூனிடெக், எச்.எப்.சி.எல்., மற்றும் பீ.எஸ்.என்.எல்., ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே கூடுதலாக, 9.99 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. ஏனைய அனைத்து நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
வோடபோன்ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும், 1.57 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து, சென்ற டிசம்பர் மாத இறுதியில், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11.85 கோடியாக குறைந்துள்ளது.இதைதொடர்ந்து, வோடபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 32.80 லட்சம் குறைந்து, 14.75 கோடியாக குறைந்துள்ளது.
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 29.50 லட்சம் குறைந்து, 6.96 கோடியாகவும், ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 19.70 லட்சம் குறைந்து, 6.33 கோடியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 17 லட்சம் குறைந்து, 18.19 கோடியாகவும் சரிவடைந்துள்ளன.
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.97 லட்சம் குறைந்து, 11.39 கோடியாக சரிவடைந்துள்ளது.சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தில், அலைபேசி சேவை வழங்கி வரும், சிஸ்டெமா ஷியாம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 7.89 லட்சம் குறைந்து, 1.49 கோடியாக சரிவடைந்துள்ளது. பீ.எஸ். என்.எல்.,அதேசமயம், பொதுத்துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற டிசம்பர் மாதத்தில், 13,013 உயர்ந்து, 9.99 கோடியாக அதிகரித்துள்ளது. மற்றொரு பொதுத் துறை நிறுவனமான, எம்.டீ.என்.எல்.,ன், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2,975 குறைந்து, 53 லட்சமாக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வரையிலுமாக, நாடு தழுவிய அளவில், 8 கோடிக்கும் அதிகமானோர், அலைபேசி எண்ணை மாற்றாமல், வேறொரு நிறுவனத்தின் சேவையை பெற விண்ணப்பித்துள்ளனர். மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், ராஜஸ்தான் மாநிலத்தில், மிக அதிக அளவாக, 75.90 லட்சம் வாடிக்கையாளரும், குஜராத்தில், 69.40 லட்சம் வாடிக்கையாளரும் விண்ணப்பித்துள்ளனர்.இவற்றையடுத்து, கர்நாடகா (99 லட்சம் பேர்), ஆந்திரா (74 லட்சம் பேர்) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும், எண்ணை மாற்றாமல், வேறொரு நிறுவனத்தின் சேவையை பெறுவதற்காக, 29.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.சாதாரண வகை தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற நவம்பர் மாதத்தில், 3.09 கோடியாக குறைந்திருந்தது. இது, டிசம்பர் மாதத்தில், மேலும் குறைந்து, 3.07 கோடியாக சரிவடைந்துள்ளது.
நாடு தழுவிய அளவில், சென்ற டிசம்பர் மாதத்தில், அகண்ட அலைபேசி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.50 கோடி என்ற அளவில் உயர்ந்துஉள்ளது. இது, கடந்த நவம்பர் மாதத்தை (1.49 கோடி வாடிக்கையாளர்) விட, 0.67 சதவீதம் அதிகமாகும் என, "டிராய்' அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)