நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,300 கோடி குறைவுநாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,300 கோடி குறைவு ... தரைவிரிப்பு ஏற்றுமதி ரூ.415 கோடி தரைவிரிப்பு ஏற்றுமதி ரூ.415 கோடி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ராஜிவ் காந்தி பங்கு சேமிப்பு திட்டம்எளிமைப்படுத்தப்படும்: ப.சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:13

மும்பை:சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ராஜிவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் (ஆர்.ஜி.இ. எஸ்.எஸ்.,) மேலும் எளிமைப்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.தங்கத்தில் முதலீடு:மக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்குகள், பரஸ்பர நிதி திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுஉள்ளது.

இதன்படி, முதன் முதலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு, வரிச் சலுகைகள் கொண்ட, ஆர்.ஜி.இ.எஸ்.எஸ்., திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.மும்பையில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தை ப.சிதம்பரம் துவக்கி வைத்து பேசியதாவது:அதிக அளவில் முதலீட்டாளர்களை கவரும் நோக்கில், ஆர்.ஜி.இ.எஸ்.எஸ்., திட்டம் மேலும் எளிமைப்படுத்தப்படும்.

இது குறித்த அறிவிப்பு, வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வெளியாகும். பொருளாதார வளர்ச்சி:நிதித் துறையின் அனைத்து கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான, "வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' விதிமுறைகள், ஒருங்கிணைக்கப்படுவது அவசியம்.நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என, மத்திய புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது. ஆனால், இதை விட அதிகமாக, அதாவது, 5.5 சதவீதமாக இருக்கும் என நிதி அமைச்சகம் நம்புகிறது. பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதன் காரணமாக, வரும் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)