பதிவு செய்த நாள்
10 பிப்2013
00:13
மும்பை:சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ராஜிவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் (ஆர்.ஜி.இ. எஸ்.எஸ்.,) மேலும் எளிமைப்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.தங்கத்தில் முதலீடு:மக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்குகள், பரஸ்பர நிதி திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுஉள்ளது.
இதன்படி, முதன் முதலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு, வரிச் சலுகைகள் கொண்ட, ஆர்.ஜி.இ.எஸ்.எஸ்., திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.மும்பையில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தை ப.சிதம்பரம் துவக்கி வைத்து பேசியதாவது:அதிக அளவில் முதலீட்டாளர்களை கவரும் நோக்கில், ஆர்.ஜி.இ.எஸ்.எஸ்., திட்டம் மேலும் எளிமைப்படுத்தப்படும்.
இது குறித்த அறிவிப்பு, வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வெளியாகும். பொருளாதார வளர்ச்சி:நிதித் துறையின் அனைத்து கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான, "வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' விதிமுறைகள், ஒருங்கிணைக்கப்படுவது அவசியம்.நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என, மத்திய புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது. ஆனால், இதை விட அதிகமாக, அதாவது, 5.5 சதவீதமாக இருக்கும் என நிதி அமைச்சகம் நம்புகிறது. பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதன் காரணமாக, வரும் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|