பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:25
மும்பை:பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்ற ஜனவரி மாதத்தில், 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஒன்பது மாதங்களில், இல்லாத அதிகபட்ச அளவாகும்.இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முன் எப்போதும்
இல்லாத வகையில், 8.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற ஜனவரியில், இன்கம் பண்ட்ஸ் திட்டங்கள், 17,281 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன. இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த, 32 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கில்ட் பண்டு திட்டங்கள் ஈர்த்த தொகை, 1,145 கோடி ரூபாயாக உள்ளது.
இதையடுத்து, இத்திட்டங்கள் வாயிலாக நிர்வகிக்கப்படும், சொத்து மதிப்பு, 19 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,700 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. மேலும், நிதி சந்தை சார்ந்த முதலீட்டு திட்டங்கள், 44,865 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன.சென்ற ஜனவரி மாதத்தில், கோல்டு ஈ.டி.எப்., திட்டங்கள், 81 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன. இதையடுத்து, கோல்டு ஈ.டி.எப்., திட்டங்களின் சொத்து மதிப்பு, 0.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, முதன் முறையாக, 12 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இருப்பினும், சென்ற 2012ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரியில் தான், கோல்டு ஈ.டி.எப்., திட்டங்கள் குறைந்த அளவிலான முதலீட்டை கவர்ந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|