உரங்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்க அனுமதிஉரங்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்க அனுமதி ... வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பரஸ்பர நிதி நிறுவனங்களின்சொத்து மதிப்பு 8.7 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
00:25

மும்பை:பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்ற ஜனவரி மாதத்தில், 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஒன்பது மாதங்களில், இல்லாத அதிகபட்ச அளவாகும்.இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முன் எப்போதும்
இல்லாத வகையில், 8.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற ஜனவரியில், இன்கம் பண்ட்ஸ் திட்டங்கள், 17,281 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன. இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த, 32 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கில்ட் பண்டு திட்டங்கள் ஈர்த்த தொகை, 1,145 கோடி ரூபாயாக உள்ளது.

இதையடுத்து, இத்திட்டங்கள் வாயிலாக நிர்வகிக்கப்படும், சொத்து மதிப்பு, 19 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,700 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. மேலும், நிதி சந்தை சார்ந்த முதலீட்டு திட்டங்கள், 44,865 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன.சென்ற ஜனவரி மாதத்தில், கோல்டு ஈ.டி.எப்., திட்டங்கள், 81 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன. இதையடுத்து, கோல்டு ஈ.டி.எப்., திட்டங்களின் சொத்து மதிப்பு, 0.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, முதன் முறையாக, 12 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இருப்பினும், சென்ற 2012ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரியில் தான், கோல்டு ஈ.டி.எப்., திட்டங்கள் குறைந்த அளவிலான முதலீட்டை கவர்ந்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)