உரங்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்க அனுமதிஉரங்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்க அனுமதி ... தங்கத்தை சுத்திகரிக்க களமிறங்கும் நிறுவனங்கள் தங்கத்தை சுத்திகரிக்க களமிறங்கும் நிறுவனங்கள் ...
வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
00:28

பெங்களுரூ:வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி வரம்பை, 2 லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மாத ஊதியம் பெறுவோர், மத்திய நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆய்வுஅசோசெம் அமைப்பு, நாடு தழுவிய அளவில், பல்வேறு துறைகளில் மாத ஊதியம் பெறுவோரிடையே ஆய்வு மேற்கொண்டது.அதில், பெரும்பாலானவர்கள், வருமான வரி, கல்வி மற்றும் மருத்துவ செலவினங்களுக்கான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என, தெரிவித்து உள்ளனர்.இந்த ஆய்வில், உண்மையான பணவீக்கத்தின் அடிப்படையில், வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை என, 89 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வருமான வரி வரம்பை, குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயாகவும், பெண்களுக்கு 3.50 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்க வேண்டும்.

இதனால், தனி நபரின் வாங்கும் சக்தி பெருகும், தேவை அதிகரிக்கும். நேரடி வரிகள் கோட்பாட்டில், பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்த பரிந்துரைகளின் படி, வரி விலக்கு வரம்பு நிர்ணயிப்பது அவசியம் என, ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.மருத்துவ செலவினத்திற்கான வரிச் சலுகையை, 15 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, 89 சதவீதம் பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பயணப்படிநிறுவனங்கள், ஊழியர்களுக்கு தரும் பயணப்படியில், மாதம் 800 ரூபாய் வரை, தற்போது வரி விலக்கு சலுகை உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இத்தொகையை, தற்போது உயர்ந்துள்ள போக்குவரத்து கட்டணங்களின் அடிப்படையில், 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், ஆய்வில் பங்கேற்றவர்கள் கோரியுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)