ஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வுஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வு ... நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொது துறை வங்கிகளுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் மூலதனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
00:01

புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013 - 14ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதல் மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் என, தெரிகிறது.இந்திய வங்கித் துறையில், வரும் ஏப்ரல் முதல், "பேசல்-3' விதிமுறை நடைமுறைக்கு வர உள்ளது. இதன் படி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், "பேசல்-3' விதிமுறையின் கீழ், வங்கிகள் குறைந்தபட்சமாக, 7 சதவீத அளவிற்கு மூலதன இருப்பு விகிதத்தை கொண்டிருக்க வேண்டும்.
விதிமுறை:புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்றால், இந்திய வங்கித் துறையில், 5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் மூலதனம் வழங்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதில், வரும் 2013 - 14ம் நிதியாண்டிற்கு, கூடுதல் மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, தெரிகிறது. பொதுத் துறையை சேர்ந்த, 12 வங்கிகளுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.
இது குறித்தும், எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப் படும் என்பது பற்றியும், வரும் 2013 - 14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.நடப்பு 2012 - 13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், சென்ற ஜனவரி நிலவரப்படி, 10 வங்கிகளுக்கு மட்டும், 12,517 கோடி ரூபாய், கூடுதல் மூலத னமாக வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.இதில், பெரும்பான்மை மூலதன தொகையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பெற்றுள்ளது. இவ்வங்கி, மத்திய அரசிடம் இருந்து, 3,004 கோடி ரூபாயை கூடுதல் மூலதனமாக பெற்றுள்ளது.
பங்கு மூலதனம்:தற்போது, பொதுத் துறை வங்கிகளில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதை, 51 சதவீதமாகக் குறைத்தால், "பேசல்-3' விதிமுறைகளுக்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்க உள்ள கூடுதல் மூலதனச் சுமை, 70 ஆயிரம் கோடியாக குறையும் என, அண்மையில் ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ் யோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)