பதிவு செய்த நாள்
16 பிப்2013
00:04
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், பொதுத் துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, 35.50 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (33.58 கோடி டன்) விட, 6 சதவீதம் அதிகமாகும்.இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில், கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு, 80 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனம், 46.40 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, முந்தைய ஆண்டின், இதே மாதத்தை விட, 4 சதவீதம் உயர்ந்து, 4.46 கோடி டன்னிலிருந்து, 4.64 கோடி டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது.பொதுத் துறையை சேர்ந்த சிங்கரேனி கோலீரீஸ் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் முதல், 10 மாத காலத்தில், 4 சதவீதம் உயர்ந்து, 4.20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.,) நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி உற்பத்தி, 1.97 கோடி டன்னிலிருந்து, 2.09 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது. சென்ற ஜனவரியில் இந்நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி உற்பத்தி, 8.3 சதவீதம் அதிகரித்து, 22.20 லட்சம் டன்னிலிருந்து, 24 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|