பதிவு செய்த நாள்
16 பிப்2013
00:11
புதுடில்லி:உலக நாடுகளில், வெளிப்படையான பட்ஜெட் நடைமுறை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியா, 14வது இடத்தை பிடித்துள்ளது.இண்டர்நேஷனல் பட்ஜெட் பார்ட்னர்ஷிப் (ஐ.பீ.பி.,) என்ற அமைப்பு, "ஓபன் பட்ஜெட் சர்வே-2102' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுஉள்ளது.
ஆய்வு:பட்ஜெட் தயாரிப்பில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பங்கு கொண்டு, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பளிக்கும் நாடுகள் குறித்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, 100 நாடுகளின் பட்ஜெட் நடைமுறைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 77 நாடுகள், வெளிப்படையான பட்ஜெட் தயாரிப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தகுதிகளைக் கூட கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நாடுகளில், உலக மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வில், சராசரி தகுதி கொண்டவையாக, 43 நாடுகள் மட்டுமே தேர்வாயின.
அரசு திட்டங்களுக்கான, நிதிச் செலவினங்களை அறிய உதவும், பட்ஜெட் செயல் திட்ட அறிக்கையைக் கூட 21 நாடுகள் வெளியிடாமல் உள்ளன.ஒட்டுமொத்த அளவில், 81 நாடுகள், மக்களுக்கும், சமுதாயத்திற்கும், பட்ஜெட் தயாரிப்பு நடைமுறையில் போதுமான அளவிற்கு வாய்ப்பளிக்காமல் உள்ளன என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒளிவுமறைவற்ற பட்ஜெட் நடைமுறைகளுக்கான சராசரி தகுதியை கொண்ட, 19 நாடுகளில், இந்தியா, 14வதாக இடம்பெற்றுள்ளது.அதே சமயம், தனிப்பட்ட நாடுகளுக்கான "வெளிப்படையான பட்ஜெட் குறியீடு' குறித்த பட்டியலில், இந்தியா, 67வது இடத்திற்கு முன்னேறிஉள்ளது. கடந்த 2010ம் ஆண்டில், 68வது இடத்தில் இருந்தது.
முதலிடம்:தெற்காசியாவை பொறுத்தவரை, பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், வெளிப்படையான பட்ஜெட் தகவல் குறித்த வரிசையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.பொதுமக்களின் கருத்துக்களை பரிசீலித்து, பட்ஜெட்டில், பெரும்பான்மை தகவல்களை மறைக்காமல் வெளியிடும் நாடுகளில், நியூசிலாந்து, 93வது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில், தென்னாப்பிரிக்கா (90), இங்கிலாந்து (88), ஸ்வீடன் (84) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|