பதிவு செய்த நாள்
16 பிப்2013
00:13
புதுடில்லி:மத்திய தொகுப்பில் தேங்கியுள்ள, கோதுமையை ஏற்றுமதி செய்ய, தனியார் வர்த்தகர்களையும் அனுமதிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசுக்கு சொந்தமான, இந்திய உணவு கழகத்தின் (எப்.சி.ஐ.,), சேமிப்பு கிடங்குகளில், கோதுமை கையிருப்பு அதிகரித்து, இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கையிருப்பு:நடப்பு பிப்ரவரி மாதம், 1ம் தேதி நிலவரப்படி, எப்.சி.ஐ., கிடங்குகளில், கோதுமை கையிருப்பு, 3.08 கோடி டன்னாக உள்ளது.இந்நிலையில், நடப்பு 2012-13ம் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, 9.23 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல், கோதுமை அறுவடை துவங்க உள்ள நிலையில், இதன் வரத்து அதிகரிக்கும். இது, மத்திய அரசு, கிடங்குகளில் மேலும் இட நெருக்கடியை ஏற்படுத்தும்.
கிடங்குகள்:எனவே, தற்போது, எப்.சி.ஐ., கிடங்குகளில் உள்ள கோதுமையை ஏற்றுமதி செய்ய, தனியார் வர்த்தகர்களுக்கும் அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வரக்கூடிய கோதுமையை சேமித்து வைக்க, கிடங்குகளில் தாராளமாக இடம் கிடைக்கும்.இவ்வாறு தாமஸ் கூறினார்.
மத்திய அரசு, இதுவரையில், மத்திய தொகுப்பிலிருந்து, 45 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கூடுதலாக, 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி öŒ#ய அனுமதி வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வெளிச் சந்தை கொள்முதல் மூலம், தனியார் வர்த்தகர்கள், இது வரையில், 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|