பதிவு செய்த நாள்
16 பிப்2013
00:10
புதுடில்லி:நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்., - செப்.,), நாட்டின் பருத்தி ஏற்றுமதி, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அளவில், பருத்தி அதிகளவில் உற்பத்தியாகும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், நடப்பு பருவத்தில், இதன் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நம் நாட்டின் பருத்தி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது என, பருத்தி ஆலோசனை கழகம் தெரிவித்துள்ளது.கடந்த 2011 - 12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், பருத்தி ஏற்றுமதி, சாதனை அளவாக, 1.29 கோடி பொதிகளாக (ஒரு பொதி = 170 கிலோ) மிகவும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், நடப்பு பருவத்தில், பருத்தி ஏற்றுமதிக்கான, பதிவு உச்ச வரம்பை, மத்திய அரசு, 70 லட்சம் பொதிகளாக நிர்ணயித்து இருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 80 லட்சம் பொதிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், இந்திய பருத்திக்கு, தேவை அதிகரிக்கும் நிலையில், இந்த ஏற்றுமதி இலக்கு மாற்றி அமைக்கப்படலாம் என, பருத்தி துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு பருவத்தில், உள்நாட்டில் பருத்தி உற்பத்தி, 3.54 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு உற்பத்தியை விட, 7 சதவீதம் குறைவாகும். இந்நிலையில், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், இது வரையிலுமாக, 27 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி ஆகியுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|