கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 35.50 கோடி டன்கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 35.50 கோடி டன் ... "வெளிப்படையான பட்ஜெட்' இந்தியாவிற்கு 14வது இடம் "வெளிப்படையான பட்ஜெட்' இந்தியாவிற்கு 14வது இடம் ...
வர்த்தகம் » ஜவுளி
நாட்டின் பருத்தி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2013
00:10

புதுடில்லி:நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்., - செப்.,), நாட்டின் பருத்தி ஏற்றுமதி, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அளவில், பருத்தி அதிகளவில் உற்பத்தியாகும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், நடப்பு பருவத்தில், இதன் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நம் நாட்டின் பருத்தி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது என, பருத்தி ஆலோசனை கழகம் தெரிவித்துள்ளது.கடந்த 2011 - 12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், பருத்தி ஏற்றுமதி, சாதனை அளவாக, 1.29 கோடி பொதிகளாக (ஒரு பொதி = 170 கிலோ) மிகவும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், நடப்பு பருவத்தில், பருத்தி ஏற்றுமதிக்கான, பதிவு உச்ச வரம்பை, மத்திய அரசு, 70 லட்சம் பொதிகளாக நிர்ணயித்து இருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 80 லட்சம் பொதிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், இந்திய பருத்திக்கு, தேவை அதிகரிக்கும் நிலையில், இந்த ஏற்றுமதி இலக்கு மாற்றி அமைக்கப்படலாம் என, பருத்தி துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு பருவத்தில், உள்நாட்டில் பருத்தி உற்பத்தி, 3.54 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு உற்பத்தியை விட, 7 சதவீதம் குறைவாகும். இந்நிலையில், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், இது வரையிலுமாக, 27 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி ஆகியுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)