பதிவு செய்த நாள்
17 பிப்2013
14:53
மும்பை : சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தொலை தொடர்பு நிறுவனமான யுனிநார் நிறுவனம் மும்பையில் தனது சேவையை நிறுத்தியது. இதனால் 18 லட்சம் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக்கினர். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதில் நடந்து முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் 9 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்களை கடந்த ஆண்டு பிப்ரவரி சுப்ரீம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதியன்று 122 லைசெனஸ்கள் ரத்து செய்ததை எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் யூனிநார் நிறுவனம் தனது மும்பை வட்டத்தில் பெற்றிருந்த 22 லைசென்ஸ்களை இழந்தது. இதையடுத்து மும்பை வட்டத்தில் நள்ளிரவில் தனது சேவையை நிறுத்தியதால் 18 லட்சம் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|