பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:31
புதுடில்லி:சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டில், உற்பத்தி செய்யப்பட்ட கனிமங்கள் மதிப்பு, 18,195 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி மதிப்பை விட, 7.9 சதவீதம் அதிகமாகும் என, மத்திய கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கச்சாஎண்ணெய்சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் மொத்த கனிமங்கள் உற்பத்தி மதிப்பில், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்புத் தாது, இயற்கை எரிவாயு, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகிய ஆறு கனிமங்களின் பங்களிப்பு, 95 சதவீதம் என்ற அளவில் உள்ளது.கணக்கீட்டு மாதத்தில், நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்ற கனிமங்களின் உற்பத்தி மதிப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. அதேசமயம், சுண்ணாம்புக்கல் மற்றும் பழுப்பு நிலக்கரி ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பு குறைந்துள்ளது.
நிலக்கரி:ஆறு கனிமங்களின் உற்பத்தி மதிப்பில், நிலக்கரியின் பங்களிப்பு, 34 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சென்ற டிசம்பரில், நிலக்கரி உற்பத்தி மதிப்பு, 6,254 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்து உள்ளது.இதையடுத்து, கச்சா எண்ணெய் (5,854 கோடி ரூபாய்), இரும்புத்தாது (2,331 கோடி ரூபாய்), இயற்கை எரிவாயு (2,076 கோடி ரூபாய்), பழுப்பு நிலக்கரி (416 கோடி ரூபாய்), சுண்ணாம்புக்கல் (346 கோடி ரூபாய்) ஆகிய கனிமங்கள் உள்ளன.மதிப்பீட்டு காலத்தில், நிலக்கரி உற்பத்தி, 2.35 கோடி டன் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சுண்ணாம்புக்கல் (38 லட்சம் டன்), இயற்கை எரிவாயு (324 கோடி கன மீட்டர்), கச்சா எண்ணெய் (32 லட்சம் டன்) ஆகிய கனிமங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|