பதிவு செய்த நாள்
19 பிப்2013
01:20
புதுடில்லி: உள்நாட்டில் நிலக்கரிக்கான தேவை, ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, வரும் 2016-17ம் நிதியாண்டில், 98 கோடி டன்னாக உயரும் என, ஆ#வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.நாட்டின் மின் தேவை அதிகரித்து வருவதால், அனல் மின் நிலையங்களுக்கு அதிக அளவில் நிலக்கரி தேவைப்படுகிறது.
பங்களிப்பு:மதிப்பீட்டு காலத்தில், மொத்த நிலக்கரி தேவையில், மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்களிப்பு, 70 சதவீதமாக (68.20 கோடி டன்) இருக்கும். துணை மின் நிலையங்களுக்கான, 5.6 சதவீத நிலக்கரி தேவையையும் சேர்த்து, மின் துறைக்கான நிலக்கரி தேவை, 75 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதே சமயம், உருக்கு துறைக்கான நிலக்கரி தேவை, 6.70 கோடி டன்னாக உயரும்.
பயன்பாடு:இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறனில், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியின் பங்களிப்பு, 57 சதவீதமாக உள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி பயன்பாடு, 6 சதவீதம் உயர்ந்து, 63.50 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது. இதில், மின் துறையின் பங்களிப்பு, 72 சதவீதமாகவும், உருக்கு மற்றும் சிமென்ட் துறைகளின் பங்களிப்பு,முறையே, 11 மற்றும் 5 சதவீதமாகவும் உள்ளது. நாட்டின் மொத்த நிலக்கரி தேவையில், மேற்கண்ட மூன்று துறைகளின் பங்களிப்பு, 87 சதவீதமாக உள்ளது.
சென்ற நிதியாண்டில், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, முந்தைய ஐந்தாண்டுகளில், ஒட்டுமொத்தமாக 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 54 கோடி
டன்னாக உயர்ந்துள்ளது. மின் துறையில், நிலக்கரிக்கான தேவை, ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வரும் 2016-17ம் ஆண்டு, நிலக்கரி அளிப்பிற்கும், தேவைக்கும் உள்ள பற்றாக்குறை, 26.60 கோடி டன்னை எட்டும்.கடந்த சில ஆண்டுகளாக, உயர் எரிதிறன் கொண்ட நிலக்கரியின் பங்களிப்பு அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி உயர்ந்துள்ளது.
வளர்ச்சி:கோல் இந்தியா நிறுவனம், உயர் எரிதிறன் கொண்ட நிலக்கரியை குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்து வருகிறது. இதனால், இவ்வகை நிலக்கரியின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது.உள்நாட்டில், நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளதும், தரம் குறைந்த நிலக்கரி உற்பத்தி செய்யப்படுவதாலும், போதுமான அளவிற்கு, உயர் எரிதிறன் கொண்ட நிலக்கரி கிடைக்காத காரணத்தாலும், நிலக்கரி இறக்குமதி அதிகரித்து உள்ளது.
இறக்குமதி:சென்ற நிதியாண்டில், நிலக்கரி இறக்குமதி, 10 கோடி டன்னை எட்டியது. இதில் உள்நாட்டு பயன்பாடு, 16 சதவீதமாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 7 சதவீதமாக இருந்தது.நிலக்கரி இறக்குமதி, வரும் 2016-17ம் நிதியாண்டில், 27 சதவீதமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உயர் எரிதிறன் கொண்ட நிலக்கரியின் பங்களிப்பு, 3.55 கோடி டன்னாகவும், சாதாரண நிலக்கரியின் பங்களிப்பு, 23 கோடி டன்னாகவும் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|