பதிவு செய்த நாள்
19 பிப்2013
01:21
புதுடில்லி:நடப்பு 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தின் (அக்.,-செப்.,), சென்ற 15ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 165.90 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்த பருவத்தின், இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 2.7 சதவீதம் அதிகம் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 57.80 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், உத்தர பிரதேச மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 4 சதவீதம் குறைந்து, 43.60 லட்சம் டன்னாக உள்ளது.
மேலும், தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி, 3 சதவீதம் உயர்ந்து, 7.80 லட்சம் டன்னாகவும், ஆந்திராவில் இதன் உற்பத்தி, 1 சதவீதம் அதிகரித்து, 7.30 லட்சம் டன்னாகவும் உள்ளது. இவை தவிர, கர்நாடகா, 28.30 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது.நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 24.30 கோடி டன்னாக இருக்கும் என, "இஸ்மா' மதிப்பிட்டுள்ளது. எனினும், இது, கடந்த பருவத்தின் உற்பத்தியை காட்டிலும், 20 லட்சம் டன் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|