பதிவு செய்த நாள்
22 பிப்2013
01:07
புதுடில்லி:குறைந்த கட்டண விமானச் சேவையில் ஈடுபட்டு வரும், மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனம், டாட்டா குழுமத்தின் கூட்டுடன், இந்தியாவில், விமானச் சேவை துவங்கும் வகையில், புதிய நிறுவனம் ஒன்றை துவங்க திட்டமிட்டு உள்ளது.
சென்னை:இப்புதிய நிறுவனத்தில், முதல் கட்டமாக, 225 கோடி ரூபாய் (5 கோடி டாலர்) முதலீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதாக, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னான்டஸ் தெரிவித்து உள்ளார்.ஏர் ஏசியா நிறுவனம், டாட்டா குழுமம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டெலிஸ்ட்ரா டிரேடுபிளேஸ் நிறுவனத்தின் அருண் பாட்டியா ஆகியோரின் கூட்டுடன், இந்த புதிய விமானச் சேவை நிறுவனம் செயல்படும். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் இடம்பெறும்.புதிய நிறுவனம் முதலில், இந்தியாவின் தென் மாநிலங்களில் விமானச் சேவையை மேற்கொள்ள இருப்பதாகவும், பின், படிப்படியாக
இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் பெர்னான்டஸ் தெரிவித்தார்.விமானங்கள்:இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதிக்கு பிறகு, இவ்வாண்டின் கடைசியில் இருந்து, விமானச் சேவை துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முதலில், "ஏ-320' வகையைச் சேர்ந்த, 3-4 ஏர்பஸ் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என, கூறப்படுகிறது.இந்தியாவில், விமானச் சேவையில் ஈடுபடும் வகையில், ஏர் ஏசியா நிறுவனம், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம், 49 சதவீத முதலீட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக, பெர்னான்டஸ் மேலும் கூறினார்.இந்தியாவில்,
ஏர் ஏசியா நிறுவனம், விமானச் சேவையில் ஈடுபடும் நிலையில், இத்துறையில் கடும் போட்டி ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விமானக் கட்டணம் மேலும் குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|