ஆபரண தங்கம் விலைகிராமுக்கு ரூ.47 சரிவுஆபரண தங்கம் விலைகிராமுக்கு ரூ.47 சரிவு ... ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர்எண்ணிக்கை 65.75 கோடியாக அதிகரிப்பு ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர்எண்ணிக்கை 65.75 கோடியாக அதிகரிப்பு ...
இந்தியாவில் விமான சேவை: ஏர் ஏசியா ரூ.225 கோடி முதலீடு:டாட்டா குழுமத்துடன் களமிறங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
01:07

புதுடில்லி:குறைந்த கட்டண விமானச் சேவையில் ஈடுபட்டு வரும், மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனம், டாட்டா குழுமத்தின் கூட்டுடன், இந்தியாவில், விமானச் சேவை துவங்கும் வகையில், புதிய நிறுவனம் ஒன்றை துவங்க திட்டமிட்டு உள்ளது.

சென்னை:இப்புதிய நிறுவனத்தில், முதல் கட்டமாக, 225 கோடி ரூபாய் (5 கோடி டாலர்) முதலீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதாக, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னான்டஸ் தெரிவித்து உள்ளார்.ஏர் ஏசியா நிறுவனம், டாட்டா குழுமம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டெலிஸ்ட்ரா டிரேடுபிளேஸ் நிறுவனத்தின் அருண் பாட்டியா ஆகியோரின் கூட்டுடன், இந்த புதிய விமானச் சேவை நிறுவனம் செயல்படும். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் இடம்பெறும்.புதிய நிறுவனம் முதலில், இந்தியாவின் தென் மாநிலங்களில் விமானச் சேவையை மேற்கொள்ள இருப்பதாகவும், பின், படிப்படியாக

இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் பெர்னான்டஸ் தெரிவித்தார்.விமானங்கள்:இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதிக்கு பிறகு, இவ்வாண்டின் கடைசியில் இருந்து, விமானச் சேவை துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முதலில், "ஏ-320' வகையைச் சேர்ந்த, 3-4 ஏர்பஸ் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என, கூறப்படுகிறது.இந்தியாவில், விமானச் சேவையில் ஈடுபடும் வகையில், ஏர் ஏசியா நிறுவனம், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம், 49 சதவீத முதலீட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக, பெர்னான்டஸ் மேலும் கூறினார்.இந்தியாவில்,

ஏர் ஏசியா நிறுவனம், விமானச் சேவையில் ஈடுபடும் நிலையில், இத்துறையில் கடும் போட்டி ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விமானக் கட்டணம் மேலும் குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)