பதிவு செய்த நாள்
27 பிப்2013
01:01
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பல துறைகளைச் சேர்ந்த, முக்கிய நிறுவனப் பங்குகளின் விலை, வீழ்ச்சி கண்டது.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 1.64 சதவீதம் வீழ்ச்சி கண்டது.மேலும், இத்தாலி தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 316.55 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,015.14 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,293.49 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,976.94 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., இன்போசிஸ், பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய, 5 நிறுவனங்களை தவிர, ஏனைய, 25 நிறுவனப் பங்குகளின் விலையும், சரிவடைந்து போனது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 93.40 புள்ளிகள் சரிவடைந்து, 5,761.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,838.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,748.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|