"டீசல் நிலையங்களில் இரு விலை சாத்தியமில்லை'"டீசல் நிலையங்களில் இரு விலை சாத்தியமில்லை' ...  சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும் சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
01:01

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பல துறைகளைச் சேர்ந்த, முக்கிய நிறுவனப் பங்குகளின் விலை, வீழ்ச்சி கண்டது.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 1.64 சதவீதம் வீழ்ச்சி கண்டது.மேலும், இத்தாலி தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 316.55 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,015.14 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,293.49 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,976.94 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., இன்போசிஸ், பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய, 5 நிறுவனங்களை தவிர, ஏனைய, 25 நிறுவனப் பங்குகளின் விலையும், சரிவடைந்து போனது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 93.40 புள்ளிகள் சரிவடைந்து, 5,761.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,838.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,748.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)