"டீசல் நிலையங்களில் இரு விலை சாத்தியமில்லை'"டீசல் நிலையங்களில் இரு விலை சாத்தியமில்லை' ...  சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும் சரக்கு கட்டண உயர்வால்...தானியம், பருப்புகள் விலை உயரும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கிராமங்களில் 66,000 ஏ.டி.எம்.,கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
01:03

புதுடில்லி:அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொதுத் துறை வங்கிகள், கிராமப்புறங்களில், 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,களை திறக்க திட்டமிட்டுள்ளன என, நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
பண பரிவர்த்தனை:இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:ரிசர்வ் வங்கி நாட்டில், மின்னணு வாயிலான பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.இதன் பயனாக தற்போது, 65 கோடி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
மின்னணு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது மற்றும் எளிதானது ஆகும்.எனினும், மோசடிகளை தவிர்த்திட வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கு மற்றும் பரிவர்த்தனை விவரங்களை யாருக்கும் அளிக்க வேண்டாம் என, ரிசர்வ் வங்கி, அறிக்கைகள் வாயிலாக தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
வழக்குகள்:சென்ற, 2012ம் ஆண்டில், இணையதள வங்கி சேவை மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, 5,267 கோடி ரூபாய் மதிப்பிற்கு மோசடி நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக, 8,322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)