பதிவு செய்த நாள்
27 பிப்2013
01:03
புதுடில்லி:அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொதுத் துறை வங்கிகள், கிராமப்புறங்களில், 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,களை திறக்க திட்டமிட்டுள்ளன என, நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
பண பரிவர்த்தனை:இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:ரிசர்வ் வங்கி நாட்டில், மின்னணு வாயிலான பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.இதன் பயனாக தற்போது, 65 கோடி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
மின்னணு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது மற்றும் எளிதானது ஆகும்.எனினும், மோசடிகளை தவிர்த்திட வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கு மற்றும் பரிவர்த்தனை விவரங்களை யாருக்கும் அளிக்க வேண்டாம் என, ரிசர்வ் வங்கி, அறிக்கைகள் வாயிலாக தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
வழக்குகள்:சென்ற, 2012ம் ஆண்டில், இணையதள வங்கி சேவை மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, 5,267 கோடி ரூபாய் மதிப்பிற்கு மோசடி நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக, 8,322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|