இரும்பு தாது ஏற்றுமதியில்தொடர்ந்து சுணக்க நிலைஇரும்பு தாது ஏற்றுமதியில்தொடர்ந்து சுணக்க நிலை ... நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.500 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2013
00:20

சேலம்:தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக, பருப்பு வகைகளை, அரசே மொத்தமாக கொள்முதல் செய்வதால், வெளி சந்தையில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.
நியாய விலை கடை: தமிழக நியாய விலை கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, ஒரு கிலோ தலா, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய நிதியாண்டு துவங்க, இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், நியாய விலை கடைகளுக்கு வழங்குவதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பருப்பு வகைகளின், கொள்முதலை துவக்கி உள்ளது.
சென்னையின் வடக்கு, தெற்கு பகுதிகளில் சப்ளை செய்வதற்காக, 28 ஆயிரம் டன் பருப்பை, அரசே கொள்முதல் செய்கிறது. இதில், 7,000 டன் துவரம் பருப்பு, 11 ஆயிரம் டன் உளுந்தம் பருப்பு, 10 ஆயிரம் டன், "கனடியன் எல்லோ லெண்டிஸ்' வகை பருப்பு கொள்முதல் செய்வதற்கான, ஒப்பந்த புள்ளிகள், பிப்., 22ம் தேதி திறக்கப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள், 45 நாட்களுக்குள், பருப்பு ரகங்களை வழங்க வேண்டும் என்பதால், அவற்றை வடமாநிலங்களில் இருந்து வாங்காமல்,சேலம், சென்னை, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து, கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரித்து, குவிண்டாலுக்கு, 500 ரூபாயும், கிலோவுக்கு, ஏழு ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.கடந்த வாரம், ஒரு குவிண்டால் முதல் ரக துவரம் பருப்பின், ஆலை கொள்முதல் விலை, 5,500 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 6,000 ரூபாயாக உயர்ந்து விட்டது.
துவரம் பருப்பு:அதுபோன்று, ஒரு குவிண்டால், இரண்டாம் ரக துவரம் பருப்பின் விலை, 5,200 ரூபாயில் இருந்து, 5,700 ரூபாயாகவும், மூன்றாம் ரகத்தின் விலை, 5,000 ரூபாயில் இருந்து, 5,500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இதே போன்று, உளுந்தம் பருப்பு விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு குவிண்டால், முதல் ரக உளுந்தம் பருப்பு விலை, 6,300 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 6,800 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டாம் ரகம் 6,100 ரூபாயில் இருந்து, 6,550 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)