பதிவு செய்த நாள்
02 மார்2013
09:25
சென்னை: கோ ஆப்டெக்ஸ் கடைகளில், "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' திட்டம் நேற்று துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், 17 நாட்கள் மட்டும் இத்திட்டம் நடத்தப்பட்டது. இத்திட்டத்தில், இரண்டு சேலைகள் வாங்கினால், அதற்கு அதே ரகத்தில் ஒரு சேலை இலவசம். இதே போல கோ ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் எதுவாக இருந்தாலும் இரண்டு வாங்கினால், அதே ரக தயாரிப்பு ஒன்று இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கடந்தாண்டு, 34.84 கோடி ரூபாய்க்கு சில்லரை விற்பனை நடந்தது. இதனையொட்டி, இவ்வாண்டும், இத்திட்டம் நேற்று துவங்கி வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. இத்திட்டத்தில் ரொக்க விற்பனை மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடன் விற்பனை ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும். சென்னை எழும்பூரில்,கோ ஆப்டெக்ஸ்-தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜ் நேற்று இத்திட்டத்தை துவங்கிவைத்தார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|