பதிவு செய்த நாள்
08 மார்2013
00:08
கோல்கட்டா:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின், புண்ணாக்கு ஏற்றுமதி, 43.35 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (49.70 லட்சம் டன்) விட, 13 சதவீதம் குறைவாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 7.17 லட்சம் டன்னில் இருந்து, 8.44 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதில், சோயா புண்ணாக்கு, 1.73 லட்சம் டன்னும், ஆமணக்கு புண்ணாக்கு, 3.13 லட்சம் டன்னும், கடுகு புண்ணாக்கு, 3.56 லட்சம் டன்னும் அடங்கும்.
வியட்நாம் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 8.48 லட்சம் டன்னில் இருந்து, 6.57 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. ஜப்பானிற்கான ஏற்றுமதி, 11.40 லட்சம் டன்னில் இருந்து, 5.55 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. தாய்லாந்திற்கான ஏற்றுமதி, 4.50 லட்சம் டன்னில் இருந்து, 4.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இந்தோனேஷியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 2.84 லட்சம் டன்னில் இருந்து, 1.97 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அதே சமயம், ஈரானிற்கான ஏற்றுமதி, 1.90 லட்சம் டன்னில் இருந்து, 7.44 லட்சம் டன்னாக அதிகரித்தள்ளது.
நடப்பு நிதியாண்டின், 11 மாத காலத்தில்,புண்ணாக்கு ஏற்றுமதி குறைந்துள்ள நிலையிலும், சென்ற பிப்ரவரியில், இதன் ஏற்றுமதி, 6.56 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (4.85 லட்சம் டன்) விட, 35 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|