மலிவு விலை ஏலக்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனைமலிவு விலை ஏலக்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை ... கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.13,994 கோடி கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.13,994 கோடி ...
தாவர எண்ணெய் இறக்குமதி 1.09 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2013
00:17

புதுடில்லி:நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவ.,-அக்.,), நாட்டின், தாவர எண்ணெய் இறக்குமதி, கடந்த பருவத்தை விட, 7 சதவீதம் அதிகரித்து, 1.09 கோடி டன்னாக உயரும் என, தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு, தாவர எண்ணெய் வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.
இறக்குமதி: கடந்த பருவத்தில், நாட்டின், தாவர எண்ணெய் இறக்குமதி, 1.02 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு பருவத்தில், 1.09 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பயன்பாடு:உள்நாட்டில், நடப்பு 2012-13ம் பருவத்தில், தாவர எண்ணெய் பயன்பாடு, 1.75 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில், 1.65 கோடி டன்னாக இருந்தது.உணவு பொருட்களின் விலை உயர்ந்தால், அது, நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுத்திடும்.
இதை கருத்தில் கொண்டே, கச்சா சமையல் எண்ணெய் மீது, 2.5 சதவீதம் என்ற அளவிலும், சுத்திகரிக் கப்பட்ட எண்ணெய் மீது, 7.5 சதவீதம் என்ற அளவிலும் குறைவாக சுங்க வரி விதிக்கப்படுகிறது.மத்திய அரசு, உள்நாட்டில், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்:பணவீக்கம் குறையும் நிலையில், நாட்டின், விவசாயிகள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, இறக்குமதி செய்யப்படும் கச்சா சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி, 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான வரி,17.5 சதவீதமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, ஆ#வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)