பதிவு செய்த நாள்
09 மார்2013
03:54
மும்பை : மத்திய அரசுக்கு சொந்தமான, ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமாக, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் உள்ளது. இந்நிறுவனம், பொதுமக்களுக்கு, 1.57 கோடி பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையிலிருந்து, 270 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும், இந்நிறுவனம், அதன் வர்த்தகத்தை விரிவு படுத்துவற்கு தேவையான, பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, இப்பங்கு வெளி யீட்டை மேற்கொள்வதாக, இதன் நிர்வாக இயக்குனர், ஆர்.வரதராசன் தெரிவித்தார். ஒவ்வொன்றும், 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றின் வெளியீட்டு விலை, 165-172 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. "புக் பில்டிங்" எனப்படும் ஏல அடிப்படையில், மேற்கொள்ளப்படும் இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இம்மாதம், 13ம் தேதி துவங்கி, 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|