பதிவு செய்த நாள்
10 மார்2013
00:52
திருப்பூர்:ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால், பருத்தி விலை கேண்டிக்கு (356 கி@லா), 3,000 ரூபாய் உயர்ந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் நூலிழை விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தமிழக நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தி, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. உற்பத்தி:நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர் - ஏப்ரல்) பருத்தி உற்பத்தி, 3.20 கோடி பொதிகளாகவும், அதில், நூற்பாலைகளுக்கு, 2.80 கோடி பொதிகள் தேவைப்படும் எனவும், கணக்கிடப்பட்டுள்ளது.பருத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில், அதன் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
இதனால் வெளிமாநில வியாபாரிகள், சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்வதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை, 80 லட்சம் பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 60 லட்சம் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் பருத்தி விலை உயர்ந்து வருகிறது. ஒரு கேண்டி பருத்தி விலை, கடந்த வாரம், 34,500 ரூபாயில் இருந்து, 38,500 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தட்டுப்பாடு மின்வெட்டு, டீசல் விலை உயர்வால் தவிக்கும் நூற்பாலைகளுக்கு, பருத்தி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என, நூற்பாலைகள், பனியன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர்.ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து ஏற்றுமதி நடந்து வரும் நிலையில், பருத்தி விலை மீண்டும் கேண்டிக்கு 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, 38,500 ரூபாயாக இருந்த ஒரு கேண்டி பருத்தி, தற்போது, 41,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பருத்தி விலை உயர்ந்துள்ளதால், கடந்த முதல் தேதியிலிருந்து திருப்பூரில் உள்ள ஒரு சில நூற்பாலைகள், நூலிழை விலையை கிலோவுக்கு, ஐந்து ரூபாய் வரை உயர்த்தி விட்டன. பருத்தி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நூலிழை விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தமிழ்நாடு நூற்பாலைகள் கூட்டமைப்பு (டாஸ்மா) தலைவர் அப்புக்குட்டி கூறியதாவது:வெளி மாநிலங்களில் உற்பத்தியாகும் பருத்தி, அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியின் விலை உயர்ந்து வருகிறது.
ஏற்றுமதி:பருத்தி ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்கும் என, நூலிழை விலையை உயர்த்தாமல் காத்திருக்கிறோம். ஆனால், அரசு இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. தொடர்ந்து பருத்தி ஏற்றுமதி நடக்கிறது. இதனால், இதன் விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதையடுத்து, வரும் 15ம் தேதிக்குள் நூலிழை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|