'பத்திக்கிச்சு' பஞ்சு விலை:உயர போகுது நூலிழை'பத்திக்கிச்சு' பஞ்சு விலை:உயர போகுது நூலிழை ... அலைபேசி சேவையை மாற்றக்கோரிய1.40 கோடி விண்ணப்பங்கள் நிராகரிப்பு அலைபேசி சேவையை மாற்றக்கோரிய1.40 கோடி விண்ணப்பங்கள் நிராகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மந்த நிலையில் வாகன துறை: வெளிநாட்டு வர்த்தகத்தில் டயர் நிறுவனங்கள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2013
00:23

உள்நாட்டில் வாகனத் துறை சுணக்கம் கண்டுள்ளதால், டயர் நிறுவனங்கள், அயல்நாடுகளில் புதிய தொழிற்சாலை களை துவக்குவதிலும், விரிவாக்க நடவடிக்கையிலும், தீவிரம் காட்டி வருகின்றன.
முதலீடு:இந்த வகையில், ஜே.கே. டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ், அப்பல்லோ டயர்ஸ் ஆகிய நிறுவனங்கள், 2,580 கோடி ரூபாய் அளவிற்கு, அயல்நாடுகளில் முதலீடு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.ஜே.கே.டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மெக்சிகோவில் உள்ள டோர்னெல் என்ற துணை நிறுவனத்தின், டயர் உற்பத்தியை அதிகரிக்க, 80 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
டோர்னெல் தொழிற்சாலை, ஆண்டுக்கு, 67 லட்சம் டயர்களை தயாரிக்கும் திறன் கொண்டது. இதன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள், வோக்ஸ்வேகன், கிறிஸ்லர், நிசான் போன்ற, உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வினியோகம் செய்யப்படுகின்றன."வாகன நிறுவனங்களுக்கான நேரடி வினியோகம் துவங்கியுள்ளதால், தொழிற்சாலையின் டயர் உற்பத்தி திறனை, 1.50 கோடி டாலர் (82 கோடி ரூபாய்) முதலீட்டில், 72 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்' என, ஜே.கே.டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் பஜோரியா தெரிவித்தார்.
உள்நாட்டில், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கான டயர் தேவை குறைந்துள்ளதால், லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, மேற்கு ஆசிய நாடுகளுக்கு, டோர்னெல் மூலம் டயர்கள் வினியோகம் செய்வது அதிகரித்துள்ளது.
விலை உயர்வு:ஜே.கே.டயர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச டயர் விற்பனை, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 2,800 கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இது, கடந்த நிதியாண்டில், 1,018 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, இரண்டு நிதியாண்டுகளில், நிறுவனத்தின் சர்வதேச டயர் விற்பனையில், மூன்று மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதில், 1,600 கோடி ரூபாய் டோர்னெல் தொழிற்சாலை வாயிலாகவும், 900 கோடி ரூபாய், இந்திய பிரிவுகளின் டயர் ஏற்றுமதி மூலமும் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.எஞ்சிய, 300 கோடி ரூபாய், ஜே.கே.டயர் என்ற பிராண்டில், சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்ற முத்திரையுடன், துபாய்க்கு வெளியே மேற்கொள்ளப்படும்
விற்பனை மூலம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா:கடந்த சில ஆண்டுளாக, பல்வேறு நாடுகளின் பொருளாதாரம், ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இது போன்ற தருணத்தில், பொருளாதார வளர்ச்சி பிராந்தியங்களில், ஏதாவது ஒன்றில் தீவிரம் கவனம் செலுத்த வேண்டும். நிறுவனம், இதை பின்பற்றி, மிகச் சிறந்த பயனை கண்டு வருகிறது,' என, அருண் பஜோரியா மேலும் கூறினார்.
ஜே.கே.டயர் நிறுவனம், ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் உள்ள, 80க்கும் மேற்பட்ட நாடுகளில், டயர்களை விற்பனை செய்து வருகிறது.அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், கிழக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில், தலா ஒன்று என, இரண்டு புதிய தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இந்நிறுவனம், 2,500 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள உள்ளது. இத் தொழிற் சாலைகளின் டயர் உற்பத்தி திறன், தலா, 70 லட்சத்தில் இருந்து, 1 கோடி டயர்கள் என்ற அளவில் இருக்கும் என, தெரிகிறது. இந் நிறுவனம், இந்தியாவில் மந்தமாக உள்ள, இதன் டயர் விற்பனையை தூக்கி நிறுத்த, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க சந்தைகளை குறிவைத்து, வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)