பதிவு செய்த நாள்
14 மார்2013
01:03
பல்லடம்:பண்ணை கொள்முதல் விலை சரிவு காரணமாக, கறிக்கோழி உற்பத்தியை, 20 சதவீதம் குறைக்க, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு, குழு முடிவு செய்துள்ளது.
இக்குழுவின் அவசரக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. அதில், பண்ணை கொள்முதல் விலை சரிவை தடுக்க, வரும் செப்டம்பர் வரை, 20 சதவீதம் கறிக்கோழி உற்பத்தியை குறைப்பது, ஓராண்டு தாய் கோழி மற்றும் கோழி குஞ்சு உற்பத்தியை குறைப்பது என, முடிவெடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் பல்லடம், பொங்கலூர், உடுமலை, ஈரோடு, நாமக்கல் உட்பட, பல இடங்களில், 10 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில், தினமும், 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஐந்து லட்சம் கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மூன்று லட்சம் கோழிகள், கேரளாவிற்கும், தலா ஒரு லட்சம் கோழிகள், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.தற்போது நோன்பு காலம் என்பதால், கிறிஸ்துவர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக, நோன்புக்கு முன், கிலோ, 75 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை, தற்போது, 50 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பண்ணை கொள்முதல் விலை வீழ்ச்சியால்,கிலோவிற்கு,15 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக,கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|