பதிவு செய்த நாள்
14 மார்2013
12:14
புதுடில்லி: "வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்கள், தங்கள் நிலுவை தொகையை, வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; இல்லையேல் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வருவாய்த்துறை கணக்குபடி, 73,388 பேர் தங்களது வருமான வரியை செலுத்த தவறிவிட்டனர். இதன் மூலம், 3,859 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தப்பட வேண்டியுள்ளது. சுயமதிப்பீட்டின் அடிப்படையில், வருமான வரி கணக்கு மட்டும் தாக்கல் செய்து விட்டு, வருமான வரியை செலுத்தாமல் உள்ளவர்கள், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். நடப்பு நிதியாண்டில், அனைத்து வருமான வரிதாரர்களும், தங்கள் வருமான வரி கணக்குகளை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள், தங்கள் வருமான வரியை, இம்மாதம், 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு இதுவரை, 35 ஆயிரம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|