பதிவு செய்த நாள்
16 மார்2013
00:42
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் நேரடி வரி வசூல், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டு இலக்கான, 27 சதவீதத்தை விட, குறைவாகும்.மதிப்பீட்டு காலத்தில், உற்பத்தி வரி வாயிலாக, 1.54 லட்சம் கோடி ரூபாயும், சுங்க வரி வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளது. இவை தவிர, சேவை வரி வாயிலாக, 1.13 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும், மறைமுகவரி வாயிலாக, 41 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதுஎன,வரி துறையைச்சேர்ந்த உயரதிகாரிஒருவர்தெரிவித்தார். மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மறைமுக வரி மூலம், 5.05 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டை காட்டிலும், 27 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|