பதிவு செய்த நாள்
16 மார்2013
01:14

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வெள்ளிக்கிழமையன்று சுணக்கமாக இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, மோட்டார் வாகனம் மற்றும் வங்கி துறை பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.
குறிப்பாக, கறுப்பு பண விவகாரம் காரணமாக, தனியார் வங்கி பங்கு களின் விலை வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.73 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இருப்பினும், கடந்த மூன்று நாட்களுக்கு பிறகு, இதர ஆசியப் பங்குச் சந்தைளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், வங்கி, ரியல்எஸ்டேட், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 142.88 புள்ளிகள் சரிவடைந்து, 19,427.56 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,673.16 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,383.13 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், மகிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 36.35 புள்ளிகள் குறைந்து, 5,872.60 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|