பதிவு செய்த நாள்
17 மார்2013
00:37
மும்பை:சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, 19.70 லட்சம் சரிவடைந்து, 65.56 கோடியாக குறைந்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.யூனிநார் :மதிப்பீட்டு மாதத்தில், யூனிநார் நிறுவனம், மிக அதிகளவாக, 83.40 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 3.17 கோடியாக சரிவடைந்துள்ளது.
யூனிநார் நிறுவனம், மும்பை, உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் அதன் அலைபேசி சேவையை நிறுத்திஉள்ளது. இதன் காரணமாகவே, இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, வெகுவாக சரிவடைந்து உள்ளது.இருப்பினும், இந்நிறுவனம் தற்போது, 6 தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவையை தொடர்ந்து வருகிறது. சென்ற பிப்ரவரியில் மட்டும், இவ்வட்டங்களில், 1.20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.
மதிப்பீட்டு மாதத்தில், வீடியோகான் நிறுவனம், 1.90 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 20.60 லட்சமாக சரிவடைந்துள்ளது. இதே போன்று, எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2 லட்சம் குறைந்து, 49.10 லட்சமாகவும், ஏர்செல் நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை, 6.90 லட்சம் சரிவடைந்து, 6.09 கோடியாகவும் குறைந்துள்ளன.
அதேசமயம், ஐடியா செல்லுலார் நிறுவனத்தில், 28.50 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11.92 கோடியாக உயர்ந்துள்ளது.பார்தி ஏர்டெல் :சென்ற பிப்ரவரியில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில், 24.20 லட்சம் பேர் புதிதாக இணைந்ததையடுத்து, இதன் ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.66 கோடியாக அதிகரித்துள்ளது.இதே போன்று, வோடபோன் நிறுவனத்திலும், 21.80 லட்சம் பேர் புதிதாக இணைந்ததையடுத்து, இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14.99 கோடியாக உயர்ந்துள்ளது என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|