பதிவு செய்த நாள்
17 மார்2013
15:07
புதுடில்லி:கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, புகார் கூறப்பட்டதை அடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக, தனியார் தணிக்கை நிறுவனத்தின் உதவியை, எச்.டி.எப்.சி., வங்கி நாடியுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த, மூன்று முக்கிய வங்கிகள், வாடிக்கையாளர்களிடமிருந்து, கறுப்பு பணத்தை பெற்று, அவற்றை சட்ட விரோதமாக, வெள்ளையாக மாற்றுவதாக, "கோப்ரா' என்ற இணையதள பத்திரிகை, பகீர் தகவலை வெளியிட்டது. இதற்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.இந்நிலையில், எச்.டி.எப்.சி., வங்கி, இந்த முறைகேடு குறித்து விசாரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கியில் உள்ள சில ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, "டிலாய்ட் டச் டொமட்சு' என்ற, பிரபலமான தணிக்கை நிறுவனத்தை நியமித்துள்ளோம்.அதேபோல், விதிமுறை மீறல் நடந்ததா என விசாரிக்க, மற்றொரு தனியார் நிறுவனத்தை நியமித்துள்ளோம். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கி செயலாற்ற வேண்டும் என்பதில், நிர்வாகம் உறுதியாக உள்ளது. இதை உறுதி செய்வதற்காகவே, தற்போது விசாரணைக்காக, சில தனியார் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளோம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றொரு வங்கியான, ஐ.சி.ஐ.சி.ஐ., இது தொடர்பாக, 18 ஊழியர்களை, அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|