துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 49.80   கோடி டன்துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 49.80 கோடி டன் ... விவசாய கடன்கள் தள்ளுபடி திட்டம்: வங்கிகளுக்கு மத்திய அரசு கண்டிப்பு விவசாய கடன்கள் தள்ளுபடி திட்டம்: வங்கிகளுக்கு மத்திய அரசு கண்டிப்பு ...
கறுப்பு பண விவகாரம் எச்.டி.எப்.சி., புது முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2013
15:07

புதுடில்லி:கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, புகார் கூறப்பட்டதை அடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக, தனியார் தணிக்கை நிறுவனத்தின் உதவியை, எச்.டி.எப்.சி., வங்கி நாடியுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த, மூன்று முக்கிய வங்கிகள், வாடிக்கையாளர்களிடமிருந்து, கறுப்பு பணத்தை பெற்று, அவற்றை சட்ட விரோதமாக, வெள்ளையாக மாற்றுவதாக, "கோப்ரா' என்ற இணையதள பத்திரிகை, பகீர் தகவலை வெளியிட்டது. இதற்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.இந்நிலையில், எச்.டி.எப்.சி., வங்கி, இந்த முறைகேடு குறித்து விசாரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கியில் உள்ள சில ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, "டிலாய்ட் டச் டொமட்சு' என்ற, பிரபலமான தணிக்கை நிறுவனத்தை நியமித்துள்ளோம்.அதேபோல், விதிமுறை மீறல் நடந்ததா என விசாரிக்க, மற்றொரு தனியார் நிறுவனத்தை நியமித்துள்ளோம். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கி செயலாற்ற வேண்டும் என்பதில், நிர்வாகம் உறுதியாக உள்ளது. இதை உறுதி செய்வதற்காகவே, தற்போது விசாரணைக்காக, சில தனியார் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளோம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றொரு வங்கியான, ஐ.சி.ஐ.சி.ஐ., இது தொடர்பாக, 18 ஊழியர்களை, அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)