பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி5,600 கோடி டாலராக சரிவடையும்பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி5,600 கோடி டாலராக சரிவடையும் ... "கடன் வசூலில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்' "கடன் வசூலில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்' ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
@ரஷன் கடைகளுக்கு கொள்முதல்: மை‹ரு பருப்பு விலை கிடுகிடு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2013
23:46

சேலம்,: தமிழக அரசின் பொது வினியோக திட்டத்துக்காக, மைசூரு பருப்பை கொள்முதல் செய்ததால், வெளி மார்க்கெட்டில் அந்த பருப்புக்கு மவுசுஅதிகரித்து, குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய் வரை, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராதமிழக ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில், 10 ஆயிரம் டன், "கனடியன் எல்லோ லெண்டிஸ்' என்ற மைசூரு பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த பருப்பு,தமிழகத்தில் உள்ள மொத்த வியாபாரிகளிடமே கொள்முதல் செய்யப்பட்டதால், மைசூரு பருப்பு விலை, குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய் வரையும்,

கிலோவுக்கு, 11 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது.தமிழகத்துக்கு தேவையான மைசூர் பருப்பு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத்,

கர்நாடக மாநிலங்களில் இருந்து, விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த, 2009ல் பருப்பு விலையில் கடும் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பருப்பு விற்பனையை

துவக்கியது.தற்போது, நடப்பு நிதிஆண்டு கணக்கை முடிக்கும் வகையில், தமிழக நுகர்

பொருள் வாணிபக் கழகம், மைசூரு பருப்புக்கான கொள்முதல் டெண்டரை அறிவித்தது.Œரிவு நிலைஇந்த டெண்டரை எடுத்த வியாபாரிகள், தமிழக பெரிய வியாபாரிகளிடம் இருந்து, மைசூரு பருப்பை மொத்தமாக கொள்முதல் செய்துவருகின்றனர். இதன் காரணமாக, வெளி மார்க்கெட்டுக்கு, மைசூரு பருப்பின் வரத்தில், சரிவு

ஏற்பட்டுள்ளது.இதனால், வெளிமார்க்கெட்டில், அதன் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரை, முதல் ரக மைசூர் பருப்பு மொத்த விலையில், குவிண்டால், 5,200 ரூபாய்க்கு விற்றது, 6,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.இரண்டாவது ரகம், குவிண்டால், 4,800 ரூபாய்க்கு விற்றது, 5,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லரை விலையில்கிலோவுக்கு, 11 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது.சில்லரை விலைகடந்த வாரம் வரை, சில்லரை விலையில், மைசூரு பருப்பு முதல் ரகம் கிலோ, 53 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் கிலோ, 49 ரூபாய்க்கும் விற்றது.செவ்வாய்ப்பேட்டை பருப்பு வியாபாரி சத்தியமூர்த்தி கூறியதாவது:

தமிழக அரசு பொது வினியோக திட்டத்துக்கு, பருப்பு வகைகளை கொள்

முதல் செய்ய துவங்கியதால், பருப்பு விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால், வியாபாரிகள் பருப்பை பதுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், அதன் விலையில் மேலும் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு பொது வினியோக திட்டத்துக்கான பருப்பை, வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)