பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி5,600 கோடி டாலராக சரிவடையும்பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி5,600 கோடி டாலராக சரிவடையும் ... ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.87 லட்சம் கோடியாக வளர்ச்சி ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.87 லட்சம் கோடியாக வளர்ச்சி ...
"கடன் வசூலில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2013
23:50

புதுடில்லி: வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருகிறது. எனவே, வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதில், தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் தலைமையில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு, பத்திரிகையாளர்

களிடம் சிதம்பரம் கூறியதாவது:பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் செயல்பாடு, மிகவும் மந்தமாக <உள்ளது.

இதனால், வங்கிகள் வழங்கிய கடனை திரும்பப் பெறுவதில் இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சாரம், நிலக்கரி, உருக்கு, சாலை போக்குவரத்து போன்ற துறைகளின் செயல்பாடு, மிகவும் சுணக்கமாக உள்ளது. இது, மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.கடந்த 2011ம் ஆண்டு, மார்ச் மாத இறுதியில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 71,080 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த டிசம்பர் மாத இறுதியில், 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. பொதுத் துறை வங்கிகளின் மொத்த கடனில், 53.68 சதவீதம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக, வங்கிகளின் கடன் வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், வசூலாகாத கடனை திரும்பப் பெறுவதில், அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். தொழில் துறையினரும், வங்கி கடனை மட்டும் சார்ந்திராமல், கூடுதல் முதலீடு மேற்கொள்ள வேண்டும். 7 லட்சம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட, 215 திட்டங்கள் முன்னேற்றம் இல்லாமல் உள்ளன. மேற்கண்ட திட்டங்களுக் காக வங்கிகள் வழங்கிய கடன், 54 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.

மேலும், 3.55 லட்சம் கோடி ரூபாய் செலவில், 126 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு, வங்கிகள், 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளன.வரும் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, கூடுதலாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் வழங்க உள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், மூன்று பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதல் மூலதனம் வழங்கப்படும்.ரிசர்வ் வங்கிநாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிதி புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வுக் கொள்கையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)