நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.46 கோடி டன்னாக குறையும்நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.46 கோடி டன்னாக குறையும் ... மத்திய அரசு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வாங்கும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய காசோலை நடைமுறை: மீண்டும் தள்ளிவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
00:50

மும்பை:வங்கிகளில், புதிய காசோலை நடைமுறை, வரும் ஏப்ரலில் அமலுக்கு வர இருந்த நிலையில், அதை ஜூலை 31ம் தேதி வரை, மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.காசோலை வாயிலான பணப்பரிமாற்றத்தை மிக விரைவாக, ஒரே நாளில் மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியை, அனைத்து வங்கிகளிலும் நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பம்:"சி.டி.எஸ்' (செக் டிரன்கேஷன் சிஸ்டம்) என்ற இந்த திட்டத்தின் கீழ், அனைத்து வங்கிகளும்சி.டி.எஸ்-2010' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்த வேண்டும்.இவை "ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்-லைன் வாயிலாகவே, மற்றொரு வங்கிக் கிளைக்குஅனுப்பி வைக்கப் படும். இதையடுத்து, வாடிக்கையாளருக்கு, காசோலையில் குறிப்பிட்டுள்ள பணம் உடனடியாக வழங்கப்படும்
இத்தகைய வசதி கொண்டஇந்த காசோலைகளை, முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு, அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களிடம் உள்ள பழைய காசோலைகளை திரும்பப் பெற்று வருகின்றன. நடப்பாண்டு, ஜனவரி முதல் "சி.டி.எஸ்-2010' காசோலைகள் நடைமுறை அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
பின்னர் இது, நடப்பு மார்ச் 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது.தற்போது, வங்கி வட்டாரத்தில், பழைய காசோலைகளின் புழக்கம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய காசோலைகளை நடைமுறைபடுத்துவதற்கான காலக் கெடு, மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது என்றும், சி.டி.எஸ்-2010' தொழில்நுட்ப வசதி கொண்ட காசோலைகள் மட்டுமே ஏற்கப்படும் என, ரிசர்வ் வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டணம்: வங்கிகள்,சேமிப்புகணக்கு வாடிக்கையாளர்களுக்கு, முதன்முறையாகவழங்கும் புதிய காசோலை களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், மின்னணு பணப்பட்டுவாடா சேவைகள் (இ.சி.எஸ்.,) வசதி கொண்ட வங்கிக் கிளைகள், பழைய அல்லது புதிய காசோலைகளை வாடிக்கையாளர்களிடம் ஏற்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இ.சி.எஸ்., பயன்பாடு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)