பதிவு செய்த நாள்
27 மார்2013
01:33
சேலம்:தமிழகத்தில், வறட்சி காரணமாக, கரும்பு சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வெல்லம் விலை, நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.
வறட்சி:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்ததால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட, 31 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிக் கிடக்கின்றன. இதனால், கரும்பு அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெல்லம் உற்பத்தி அதிக அளவில் நடக்கும், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, சித்தோடு, நாமக்கல் மாவட்டம் பீலிக்கல்பாளையம், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெல்லம் உற்பத்திக்கு தேவையான கரும்பு போதிய அளவு கிடைக்காததால், அதன் உற்பத்தியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சேலம் செவ்வாய்ப் பேட்டையில் தினம் தோறும் நடக்கும் வெல்லச் சந்தையில், வெல்லம் வரத்து குறைந்துள்ளது.கடந்த வாரம் வரை, சேலம் தினசரி சந்தைக்கு, 3,500 சிப்பம் வரை, உருண்டை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது. இது தற்போது, 1,200 சிப்பமாக குறைந்துள்ளது. இதேபோல், நாமக்கல், ஈரோடு மாவட்ட வெல்லச் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும் வெல்லத்தில், 50 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
தட்டுப்பாடு :அதேசமயம், வெல்லத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, 42 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு கிலோ உருண்டை வெல்லம், தற்போது, 48 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அச்சு வெல்லம், 50 ரூபாயில் இருந்து, 57 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|