உர மானியம் டன்னுக்கு ரூ.2,700 குறைய வாய்ப்புஉர மானியம் டன்னுக்கு ரூ.2,700 குறைய வாய்ப்பு ... வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் புதிய சாதனை வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் புதிய சாதனை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தமிழகத்தில் வெல்லம் விலை கிடு கிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2013
01:33

சேலம்:தமிழகத்தில், வறட்சி காரணமாக, கரும்பு சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வெல்லம் விலை, நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.
வறட்சி:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்ததால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட, 31 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிக் கிடக்கின்றன. இதனால், கரும்பு அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெல்லம் உற்பத்தி அதிக அளவில் நடக்கும், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, சித்தோடு, நாமக்கல் மாவட்டம் பீலிக்கல்பாளையம், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெல்லம் உற்பத்திக்கு தேவையான கரும்பு போதிய அளவு கிடைக்காததால், அதன் உற்பத்தியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சேலம் செவ்வாய்ப் பேட்டையில் தினம் தோறும் நடக்கும் வெல்லச் சந்தையில், வெல்லம் வரத்து குறைந்துள்ளது.கடந்த வாரம் வரை, சேலம் தினசரி சந்தைக்கு, 3,500 சிப்பம் வரை, உருண்டை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது. இது தற்போது, 1,200 சிப்பமாக குறைந்துள்ளது. இதேபோல், நாமக்கல், ஈரோடு மாவட்ட வெல்லச் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும் வெல்லத்தில், 50 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
தட்டுப்பாடு :அதேசமயம், வெல்லத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, 42 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு கிலோ உருண்டை வெல்லம், தற்போது, 48 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அச்சு வெல்லம், 50 ரூபாயில் இருந்து, 57 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)