பதிவு செய்த நாள்
28 மார்2013
03:04
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டு முடிவதற்கு, இன்னும் மூன்று தினங்களே உள்ளன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 10.5 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,250 கோடி டாலராக (68,750 கோடி ரூபாய்) சரிவடையும் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,400 கோடி டாலராக (77 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், 1,800 கோடி டாலர் (99 ஆயிரம் கோடி ரூபாய்), அளவிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்தது.
நம் நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், 65 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நாடுகளுக்கான ஏற்றுமதி மிகவும் சரிவடைந்து உள்ளது.மேற்கத்திய நாடுகளின் சந்தைகளில், ஆயத்த ஆடைக்கான தேவை குறைந்துள்ளதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 10.5 சதவீதம் சரிவடைந்து, 1,250 கோடி டாலராக குறையும் என, ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|