மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் திடீர் குறைப்புமூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் திடீர் குறைப்பு ... ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தமிழக வங்கிகளில் டெபாசிட் 14 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
14:31

சென்னை: சென்ற 2012ம் ஆண்டு டிசம்பர் வரையிலுமாக, தமிழக வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட், 14.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,11,478 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், தமிழக வங்கிகள் வழங்கிய கடன், 21.67 சதவீதம் உயர்ந்து, 5,01,143 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, தமிழக வங்கிகளின் கடன் மற்றும் டெபாசிட் விகிதம், 121.79 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உள்ளது. இது, நாட்டில் உள்ள இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மிக அதிக பட்ச அளவாகும் என, தமிழக வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

தமிழக வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடனில், முன்னுரிமை துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன், 43.17 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, தேசிய விதிமுறை அளவான, 40 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். இதையடுத்து, வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன்,19.76 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவும், தேசிய விதிமுறை அளவான, 18 சதவீதத்தை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடன், 62,703 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், வேளாண் துறைக்கு, 41,514 கோடியும், வேளாண் அல்லாத இதர துறைகளுக்கு, 9,576 கோடியும், இதர முன்னுரிமை துறைகளுக்கு, 11,614 கோடி ரூபாயும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, 4,445 கிராமங்களில், வங்கி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)