பதிவு செய்த நாள்
28 மார்2013
14:31
சென்னை: சென்ற 2012ம் ஆண்டு டிசம்பர் வரையிலுமாக, தமிழக வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட், 14.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,11,478 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், தமிழக வங்கிகள் வழங்கிய கடன், 21.67 சதவீதம் உயர்ந்து, 5,01,143 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, தமிழக வங்கிகளின் கடன் மற்றும் டெபாசிட் விகிதம், 121.79 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உள்ளது. இது, நாட்டில் உள்ள இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மிக அதிக பட்ச அளவாகும் என, தமிழக வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
தமிழக வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடனில், முன்னுரிமை துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன், 43.17 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, தேசிய விதிமுறை அளவான, 40 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். இதையடுத்து, வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன்,19.76 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவும், தேசிய விதிமுறை அளவான, 18 சதவீதத்தை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடன், 62,703 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், வேளாண் துறைக்கு, 41,514 கோடியும், வேளாண் அல்லாத இதர துறைகளுக்கு, 9,576 கோடியும், இதர முன்னுரிமை துறைகளுக்கு, 11,614 கோடி ரூபாயும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, 4,445 கிராமங்களில், வங்கி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|