பதிவு செய்த நாள்
28 மார்2013
16:49
புதுடில்லி : சுமார் ரூ.2000 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததாக, நோக்கியாவின், ஃபின்னிஷ் மொபைல் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செல்போன் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் நோக்கியா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் இந்தியாவில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், வருமான வரித்துறையினர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இதில் சுமார் 2000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி இந்நிறுவனத்தோடு தொடர்புடைய ஃபின்னிஷ் மொபைல் நிறுவனத்துக்கு வருமான வரித்துறையினர் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|