பதிவு செய்த நாள்
28 மார்2013
23:08
சென்னை: "ஐந்தாண்டு திட்ட நிதியில், மத்திய அரசின் பங்கு, 9.83 சதவீதம் தான்' என, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.வரி வருவா#
இதுகுறித்து, சட்டசபையில் அவர் பேசியதாவது:தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை, மத்திய அரசு தருவதில்லை. தமிழகத்துக்கு வழங்கும் வரி வருவாயின் பங்கு, மத்திய திட்டங்களுக்கு வழங்கும் நிதி உதவி ஆகியன, தமிழகத்தில் வசூலிக்கப்படும் மத்திய வரி வருவாயிலிருந்து ஒரு பங்காக அளிக்கப்படுகிறது. பெரும் பகுதி, பிற மாநிலங்களின் மேம்பாட்டுக்கே, மத்திய அரசு பயன்படுத்துகிறது. இதை, தமிழகம் ஆட்சேபிக்கவில்லை.தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என்பதே கோரிக்கை. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி பேசுகையில், "ஐந்தாண்டு திட்டத்துக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிஉள்ளது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்துக்கு, 85 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது' என, கூறியுள்ளார்.ஐந்தாண்டு திட்டம்ஐந்தாண்டு திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் பெரும்பகுதி, மாநில அரசின் நிதி தான். முழுமையாக மத்திய அரசின் நிதி அல்ல.
ஐந்தாண்டு திட்டம் என்பது, ஒவ்வொரு ஆண்டிலும் செயல்படுத்த வேண்டிய வரைவுத் திட்டத்தின், முழுமை. 12வது, ஐந்தாண்டு திட்டம் 2012-13ல் துவங்கி 2016-17ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படுகிறது.இதற்கு, தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய். முதல் ஆண்டான, 2012-13ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 28 ஆயிரம் கோடி ரூபாய்.
இதில், மத்திய அரசின் பங்கு, 3,473 கோடி ரூபாய். 2013-14ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 30 ஆயிரம் கோடி ரூபாய். மத்திய அரசின் பங்கு 3,636 கோடி ரூபாய். மொத்த ஒதுக்கீட்டில், மத்திய அரசின் பங்கு தொகை, 9.83 சதவீதம் தான்.
திட்ட நிதி
இந்நிலையில், ஐந்தாண்டு திட்டத்துக்கான நிதியை, மாநில அரசின் வருவாயிலிருந்தும், மாநில அரசு பெரும் கடனிலிருந்துமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், ஐந்தாண்டு திட்ட நிதி முழுமையையும், மத்திய அரசு வழங்குவதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது.இவ்வாறு, பன்னீர் செல்வம் பேசினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|