ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்!ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ... நாட்டின் வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் நாட்டின் வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐந்தாண்டு திட்ட நிதியை மத்திய அரசு வழங்குவதாக கூறுவது பொய்: நிதி அமைச்சர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
23:08

சென்னை: "ஐந்தாண்டு திட்ட நிதியில், மத்திய அரசின் பங்கு, 9.83 சதவீதம் தான்' என, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.வரி வருவா#
இதுகுறித்து, சட்டசபையில் அவர் பேசியதாவது:தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை, மத்திய அரசு தருவதில்லை. தமிழகத்துக்கு வழங்கும் வரி வருவாயின் பங்கு, மத்திய திட்டங்களுக்கு வழங்கும் நிதி உதவி ஆகியன, தமிழகத்தில் வசூலிக்கப்படும் மத்திய வரி வருவாயிலிருந்து ஒரு பங்காக அளிக்கப்படுகிறது. பெரும் பகுதி, பிற மாநிலங்களின் மேம்பாட்டுக்கே, மத்திய அரசு பயன்படுத்துகிறது. இதை, தமிழகம் ஆட்சேபிக்கவில்லை.தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என்பதே கோரிக்கை. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி பேசுகையில், "ஐந்தாண்டு திட்டத்துக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிஉள்ளது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்துக்கு, 85 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது' என, கூறியுள்ளார்.ஐந்தாண்டு திட்டம்ஐந்தாண்டு திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் பெரும்பகுதி, மாநில அரசின் நிதி தான். முழுமையாக மத்திய அரசின் நிதி அல்ல.

ஐந்தாண்டு திட்டம் என்பது, ஒவ்வொரு ஆண்டிலும் செயல்படுத்த வேண்டிய வரைவுத் திட்டத்தின், முழுமை. 12வது, ஐந்தாண்டு திட்டம் 2012-13ல் துவங்கி 2016-17ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படுகிறது.இதற்கு, தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய். முதல் ஆண்டான, 2012-13ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 28 ஆயிரம் கோடி ரூபாய்.

இதில், மத்திய அரசின் பங்கு, 3,473 கோடி ரூபாய். 2013-14ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 30 ஆயிரம் கோடி ரூபாய். மத்திய அரசின் பங்கு 3,636 கோடி ரூபாய். மொத்த ஒதுக்கீட்டில், மத்திய அரசின் பங்கு தொகை, 9.83 சதவீதம் தான்.

திட்ட நிதி

இந்நிலையில், ஐந்தாண்டு திட்டத்துக்கான நிதியை, மாநில அரசின் வருவாயிலிருந்தும், மாநில அரசு பெரும் கடனிலிருந்துமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், ஐந்தாண்டு திட்ட நிதி முழுமையையும், மத்திய அரசு வழங்குவதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது.இவ்வாறு, பன்னீர் செல்வம் பேசினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)