பதிவு செய்த நாள்
28 மார்2013
23:14
புதுடில்லி: நடப்பாண்டில் இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய கடன் பத்திரங்களில், 250 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும், இந்நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 100 கோடி டாலரை தாண்டிஉள்ளது.மத்திய அரசு, அன்னிய முதலீட்டை அதிகளவு ஈர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் மற்றும் அரசு கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டு கொள்கை எளிமைப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாகவே, கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது என, சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மார்ச் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில் மேற்கொண்ட முதலீடு, 120 கோடி டாலராக (6,532 கோடி ரூபாய்) உள்ளது. நடப்பாண்டில், இது வரையிலுமாக, கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 249 கோடி டாலராக (13,480 கோடி ரூபாய்) உள்ளது என, "செபி' அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.சென்ற ஜனவரியில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 55.10 கோடி டாலராகவும் (2,947 கோடி ரூபாய்), பிப்ரவரியில், 74.30 கோடி டாலராகவும் (4,000 கோடி ரூபாய்) இருந்தது. நடப்பு மார்ச் 1-26ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 24,089 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. அதேசமயம், 17,557 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன.
இதையடுத்து, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 6,532 கோடி ரூபாயாக உள்ளது.இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில், 150 கோடி டாலரை (8,557 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன. அதேசமயம், இந்நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், 1,020 கோடி டாலரை (55,055 கோடி ரூபாய்) திரும்பப் பெற்றுள்ளன.
சென்ற 2012ம் ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 664 கோடி டாலராக (35 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது. மார்ச் 25ம் தேதி நிலவரப்படி, "செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ள அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,760 ஆகவும், துணை கணக்குகளின் எண்ணிக்கை 6,331 ஆகவும் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|