ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்!ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ... நாட்டின் வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் நாட்டின் வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிதி நிறுவனங்கள் 250 கோடி டாலர் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
23:14

புதுடில்லி: நடப்பாண்டில் இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய கடன் பத்திரங்களில், 250 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும், இந்நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 100 கோடி டாலரை தாண்டிஉள்ளது.மத்திய அரசு, அன்னிய முதலீட்டை அதிகளவு ஈர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் மற்றும் அரசு கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டு கொள்கை எளிமைப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாகவே, கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது என, சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மார்ச் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில் மேற்கொண்ட முதலீடு, 120 கோடி டாலராக (6,532 கோடி ரூபாய்) உள்ளது. நடப்பாண்டில், இது வரையிலுமாக, கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 249 கோடி டாலராக (13,480 கோடி ரூபாய்) உள்ளது என, "செபி' அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.சென்ற ஜனவரியில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 55.10 கோடி டாலராகவும் (2,947 கோடி ரூபாய்), பிப்ரவரியில், 74.30 கோடி டாலராகவும் (4,000 கோடி ரூபாய்) இருந்தது. நடப்பு மார்ச் 1-26ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 24,089 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. அதேசமயம், 17,557 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன.

இதையடுத்து, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 6,532 கோடி ரூபாயாக உள்ளது.இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில், 150 கோடி டாலரை (8,557 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன. அதேசமயம், இந்நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், 1,020 கோடி டாலரை (55,055 கோடி ரூபாய்) திரும்பப் பெற்றுள்ளன.

சென்ற 2012ம் ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 664 கோடி டாலராக (35 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது. மார்ச் 25ம் தேதி நிலவரப்படி, "செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ள அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,760 ஆகவும், துணை கணக்குகளின் எண்ணிக்கை 6,331 ஆகவும் உள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)