பொறியியல் துறை இறக்குமதியை கட்டுப்படுத்த திட்டம்:நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வதால்...பொறியியல் துறை இறக்குமதியை கட்டுப்படுத்த திட்டம்:நடப்பு கணக்கு ... ... தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி:உணவு பதப்படுத்தும் துறையில்... தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி:உணவு பதப்படுத்தும் ... ...
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
00:33

புதுடில்லி:வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 10 சதவீதம் வளர்ச்சி காணும் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.இஸ்ரேல், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற புதிய சந்தைகளில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.இது தவிர, அமெரிக்காவிற்கான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இது போன்ற காரணங்களால், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, வரும் நிதியாண்டில், 10 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே விரைவில், தாராள வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது. அதன் பின்னர், சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, மேலும், சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, வங்கதேசத்திற்கு கடும் போட்டி நாடாக இந்தியா உருவெடுக்கும் என, ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் காணப்பட்ட, 1,360 கோடி டாலர் (73,440 கோடி ரூபாய்) என்ற அளவிலேயே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, 9 மாத காலத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 48,494 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 45,505 கோடி ரூபாயாக இருந்தது.இதே போன்று, ஜவுளி மற்றும் நூலிழை ஏற்றுமதியிலும் விறுவிறுப்பு தென்படுகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதி, 3,800 கோடி டாலராக (2.09 லட்சம் கோடி ரூபாய்) இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது, இலக்கு அளவான, 4,000 கோடி டாலரை காட்டிலும், குறைவு என, இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு (சி.ஐ.டி.ஐ.,) தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)