தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி:உணவு பதப்படுத்தும் துறையில்...தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி:உணவு பதப்படுத்தும் ... ... ரயிலில் டிக்கெட் முன்பதிவு, தத்கல் கட்டணம் உயர்வு:இன்று முதல் அமல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு, தத்கல் கட்டணம் உயர்வு:இன்று முதல் அமல் ...
பொது துறை நிறுவன முதலீடு: எல்.ஐ.சி.,க்கு 2.8 சதவீதம் ஆதாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
00:36

மும்பை:பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு வெளியீட்டில், எல்.ஐ.சி., நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு, ஒட்டு மொத்த அளவில், 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக, பொதுத் துறையைச் சேர்ந்த, எட்டு நிறுவனங்களின், பங்கு வெளியீடுகளில், ஆயில் இந்தியா தவிர்த்த, ஏழு நிறுவனங்களில், எல்.ஐ.சி., நிறுவனம் முதலீடு மேற்கொண்டுள்ளது.
இந்துஸ்தான் காப்பர்:இதில், ஓ.என்.ஜி.சி., தவிர, ஏனைய நிறுவனங்களில், எல்.ஐ.சி., நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு சரிவடைந்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, இந்துஸ்தான் காப்பர் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 807.90 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனம், 352.30 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு தற்போது, 40.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 209.30 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே போன்று, நேஷனல் அலுமினியம், பங்கு வெளியீட்டின் மூலம், 628.60 கோடியை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனம், 210.20 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது.
ஆனால், இதன் மதிப்பு தற்போது, 17 சதவீதம் சரிவடைந்து, 174.50 கோடியாக குறைந்துள்ளது.என்.எம்.டீ.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 5,979.80 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனம், 280.60 கோடியை முதலீடு செய்திருந்தது. ஆனால், இதன் மதிப்பு தற்போது, 9.7 சதவீதம் குறைந்து, 253.40 கோடியாக சரிவடைந்துள்ளது.ஓ.என்.ஜி.சி., நிறுவனம்:மற்றொரு பொதுத் துறை நிறுவனமான, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 12,352.80 கோடியை திரட்டி கொண்டது. இந்நிறுவனத்தின் பங்குகளில், எல்.ஐ.சி., நிறுவனம், 11,401.90 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. கணக்கீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் பங்கின் விலை உயர்ந்ததையடுத்து, எல்.ஐ.சி., நிறுவனம், இந்நிறுவனத்தில் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு, 6.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,117 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், என்.டி.பி.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 11,469.40 கோடியை திரட்டி கொண்டது.
இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு முதலீடு, 1,761.70 கோடியாகும். இதன் மதிப்பு தற்போது, 3.2 சதவீதம் குறைந்து, 1,705.40 கோடியாக சரிவடைந்துள்ளது.செயில் நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,514.50 கோடியை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு முதலீடு, 1,068.80 கோடியாகும். ஆனால், இந்த முதலீட்டு மதிப்பு, தற்போது, 0.2 சதவீதம் குறைந்து, 1,066.20 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.ஆர்.சி.எப்., நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 310.30 கோடியை திரட்டி கொண்டது. இந்நிறுவனத்தின் பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம், 142.30 கோடிக்கு வாங்கியது. ஆனால், தற்போது, இதன் மதிப்பு, 19.3 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 114.80 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
ஆயில் இந்தியா:ஆயில் இந்தியா நிறுவனம், பங்கு வெளியீடு மூலம், 3,145 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. ஆனால், எல்.ஐ.சி., நிறுவனம், இதன் பங்கு வெளியீட்டில் முதலீடு எதுவும் மேற்கொள்ளவில்லை.ஒட்டு மொத்த அளவில், கணக்கீட்டு காலத்தில், மேற்கண்ட பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்துமாக, பங்கு வெளியீடுகளின் வாயிலாக, 36,208.30 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. மேற்கண்ட அனைத்து நிறுவனங்களிலுமாக, எல்.ஐ.சி., நிறுவனம், மேற்கொண்ட முதலீடு, 15,217.80 கோடி ரூபாயாகும்.இவற்றின் தற்போதைய மதிப்பு, 15,640.60 கோடியாகும். ஆக, ஒட்டு மொத்த அளவில், மேற்கண்ட பொதுத் துறை நிறுவனங்களில், எல்.ஐ., நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு, 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)