பதிவு செய்த நாள்
06 ஏப்2013
00:18
மும்பை:சென்ற 2012-13ம் நிதியாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 1.30 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 8,00,734 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த 2010-11 மற்றும் 2011-12ம் நிதிஆண்டுகளில் முறையே, 6.2 சதவீதம் மற்றும் 5.1 சதவீதம் சரிவடைந்தது. இதையடுத்து, சென்ற நிதியாண்டில் தான், இவற்றின் சொத்து மதிப்பு, 19.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
சென்ற நிதியாண்டில், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 94,580 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. எச்.டீ.எப்.சி. நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 13.1 சதவீதம் உயர்ந்து, 1,01,720 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்த சொத்து நிர்வகிப்பில், இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
இவை தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல், 87,835 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 3 வது இடத்திலும், பிர்லா சன் லைப், 77,046 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளன.அடுத்த இடங்களில், யு.டி.ஐ., (69,450 கோடி ரூபாய்), பிராங்ளின் டெம்பிள்டன் (41,564 கோடி ரூபாய்), கோட்டக் மகிந்திரா (35,361 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|