பதிவு செய்த நாள்
07 ஏப்2013
00:06
சென்னை:ஆபரண தங்கம் விலை, நேற்று ஒரே நாளில், கிராமுக்கு, 51 ரூபாய் அதிகரித்து, 2,780 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கத்தின் விலை, 408 ரூபாய் உயர்ந்து, 22,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது.கடந்த ஒரு சில தினங்களாக, தங்கத்தின் விலை, அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், நேற்று, ஆபரண தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சந்தையில் நேற்று, 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 545 ரூபாய் அதிகரித்து, 29,730 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை, 800 ரூபாய் உயர்ந்து, 51,950 ரூபாய்க்கு விற்பனையானது.மும்பை உள்ளிட்ட இதர சந்தைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தே இருந்தது.கடந்த இரண்டு தினங்களாக, சர்வதேச அளவில், பங்கு வர்த்தகம், மந்தமாக இருந்தது. இதனால், பல முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையில் முத லீட்டை குறைத்து, தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இவற்றின் விலை உயர்ந்து உள்ளதாக, வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|