பதிவு செய்த நாள்
11 ஏப்2013
09:14
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.06 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 108.02 புள்ளிகள் அதிகரித்து 18522.47 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 43.75 புள்ளிகள் குறைந்து 5602.45 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, கடந்த ஐந்து வர்த்தக தினங்களின் தொடர் சரிவிற்கு பிறகு, "சென்செக்ஸ்' 1.03 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள் துறையைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.இதற்கிடையே, அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற செவ்வாய்க்கிழமையன்று, 665 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, "செபி' அமைப்பின் தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|