பதிவு செய்த நாள்
16 ஏப்2013
01:30
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக, 5.96 சதவீதமாக குறைந்துள்ளது என்ற செய்தி வெளியானது.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி, அடுத்த மாதம் வெளியிட உள்ள, அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நிலைப்பாட்டால், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதனால், "சென்செக்ஸ்' 0.63 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது.நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, நுகர்பொருட்கள் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. இருப்பினும், நுகர்வோர் சாதனம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 115.24 புள்ளிகள் அதிகரித்து, 18,357.80 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,424.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,144.22 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஸ்டெர்லைட் இந்தியா உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 39.85 புள்ளிகள் உயர்ந்து, 5,568.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,592.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,500.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|